பாட்டெழுதும் பாவலன் கை
பழுதுபடா எழுத்தறியும்,
பகுத்தறிவை பகிர்ந்தளிக்கும்
பாரினையும் ஆட்டுவிக்கும்!
எழுத்தைக் கொண்டே எட்டுத் திக்கும்
எழிலுறவே எத்தி நிற்கும்,
எழுதி மண்ணின் விடுதலைக்கு
எழுச்சி, சுதந்திர வழி வகுக்கும்!
அரசியல் சாக்கடை அழுக்குகளை
அன்றன்றே களமேற்றும்..
அறம் தவறா எழுத்துக்களால்
அகிலத்தை ஆட்சி செய்யும்!
கூலிக்கு விலை போகா,
குற்றமற்ற பாவலன் கை..
குல பேதம் பாராமல்,
கோலோச்சி வெற்றி பெறும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக