ஞாயிறு, 22 மே, 2016

Tagged Under:

கவிஞர் எழுத்தாளர் தயாநிதிஎழுதிய வெளி நாடு..

By: Unknown On: AM 1:51
  • Share The Gag
  • நீ.
    நான்..
    நாம்..

    எனும் போது
    கிட்டியது சுகம்..


    அஞ்சாமல்
    துஞ்சாமல்
    மிஞ்சாமல்
    கெஞ்சாமல்
    கொஞ்சிக் கழித்த
    இனிய பொழுதுகள்..

    நாலு வருடம்
    ஒரு முறை
    கிரிக்கற்
    உலகக் கோப்பை.
    ஐந்து வருடம்
    ஒரு முறை
    ஒலிம்பிக் கிண்ணம்
    இது போல்
    வாழ்க்கையிலும்
    வரையறையுடன்
    ஆட்டம் ஆரம்பம்...!

    திரை கடல்
    தாண்டிய உன்
    திரவிய தேடல்
    நீ அனுப்பும்
    பணத்தை வழங்கும்
    வங்கி உன்
    பாசத்தை வழங்காது
    வந்து விடு என்
    நெஞ்சோடு தாங்கிடுவேன்

     ஆக்கம்  கவிஞர் எழுத்தாளர் தயாநிதி




    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக