ஞாயிறு, 22 மே, 2016

Tagged Under:

திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார்

By: Unknown On: PM 4:49
  • Share The Gag
  • வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரும் அரசியல் ஆய்வாளர் ஊடகச்செம்மல் திரு.வீ,ஆர். வரதராசா அவர்கள் ஜெர்மனி ஒபெர்கவுசன் நகரில் இன்று 22.05.2016 இயற்கை எய்தியுள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தயாகச்செய்திகளைத் புலம்பெயர் நாடுகளிலுள்ள பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்குத் தொகுத்து வழங்கியவர். இவரது முழுப்பெயர் விஜயரத்தினம் வரதராஜா ஆகும்,

    பிரபல தமிழ்ப்பெரியார் கல்லடி வேலுப்பிள்ளையின் கொள்ளுப்பேரனாவார்
    பத்திரிகைத்துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற இவர் கடந்த 40 ஆண்டுகளாக பத்திரிகையாளராகவும் ஆய்வாளராகவும்
    கடமையாற்றி வந்தவர்


    .இவர் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தில் உதவிப்பொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.
    ஜெனிவாவிலிருந்து இயங்கும் சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்தில் 35 வருடகாலமாக அங்கத்தவராக இருந்தவர்.


    இவர் வீரகேசரி வெளியிட்ட நவீன விஞ்ஜானி, ஜோதி , மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 


    BBc .UNI , ரொயிற்றர் பொன்ற செய்தி நிறுவனங்களுக்கு செய்தி வழங்குனராக விளங்கினார்.இவர் தமிழருவி, ஈழமுரசு, ஈழநாடு .. ஐபிசி
    ரிரிஎன் போன்ற ஊடகங்களுக்கும் தாயக நிகழ்வுகளை செய்திகளாகவும், ஆய்வுகளாகவும் வழங்கியிருக்கிறார்.


    தமிழின விடுதலையில் ஆர்வங்கொண்ட இவர் பல கதைகள், கவிதைகள் போன்றவற்றையும் படைத்துள்ளார். 


    இவரின் மறைவு தமிழுக்கும் , தமிழினத்துக்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும். இவரின் மறைவால் துயருறும் குடும்பத்தாற்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். 

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக