வியாழன், 26 மே, 2016

Tagged Under:

கவிஞை நகுலா சிவநாதன்எழுதிய விண்ணின் துளியே!

By: Unknown On: AM 2:44
  • Share The Gag
  • விண்ணில் இருந்து வடியும் நீரே!
    விரைந்து நீயும் புவிக்கு வாராய்
    மண்ணில் வளம் பெருக்கியே!
    மனித வாழ்‌வை செழிப்பாக்கிறாய்

    துளிதுளியாய் சேர்ந்து நீயும்
    துாயநீராய் வருகிறாய்
    இடி மின்னல் இணையாய் இன்று
    பின்னல் இட்டு வருகிறாய்

    மழையாய் புவிக்கு விரைகிறாய்
    மணிக்கணக்கில் புவியோட்டில் சேருகிறாய்
    விலையில்லா உன் சேவை இன்று
    விளைபயிருக்கு ஆனந்தம்

    ஓ! மழைத்துளியே!
    ஒன்று சேரும் உன் பாங்கு
    ஒற்றுமை உணர்வை கூட்டுது இங்கு
    நின்று நீயும் புவிக்கு வந்து
    உயிரின வளர்ச்சியை கூட்டு என்றும்


    ஆக்கம்  கவிஞை
    நகுலா சிவநாதன்



    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக