புதன், 28 டிசம்பர், 2016

யேர்மன் ஶ்ரீகனகதுர்க்கா ஆலயத்தில் ஶ்ரீபஞ்சமுகஆஞ்சநேயப்பெருமானின் ஜயந்தி விழா இன்று சிறப்பாக நடைபெற்றது !

By: Unknown On: PM 3:44
  • Share The Gag


  • ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள்அடியார்களே ! 28-12-2016  அமாவாசைத்திதியும் மூலநட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் ஆஞ்சநேயப் பெருமான் அவதரித்த ஜயந்திதினம் எமது ஆலயத்தில் வீற்றிருந்து அருள் புரியும் பஞ்சமுக ஆஞ்சநேயப் பெருமானுக்கு விஷேசபூஜை பஜனை மாலை 4 மணிக்கு  நடைபெறும் அனைவரும் இதில் கலந்து ஆஞ்சநேயப்பெருமானின் திருவருள் பெற்றுள்ளனர்  சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்.தலமையில் சிறப்பா இன்றய விழா சிறப்பாக நிறைவேறியது 













    வியாழன், 15 டிசம்பர், 2016

    வேல் முருகன் ஆலயத்தில்16.12.16 வெள்ளி அபிசேகம்

    By: Unknown On: AM 5:23
  • Share The Gag
  • 16/12/2016 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 19.00 மணிக்கு முருகபெருமனுக்கு அபிசேகம் இடம்பெற்று கூட்டுப் பிரார்த்தனை இடம்பெற்று 20.00 மணிக்கு விசேட பூசை இடம்பெற்று அன்னதானத்தொடு நிறைவடையும்
    .
    நாளைய திருவிழாவினை மகாலிங்கம் குடும்பம் (Hillerød ) உபயமேடுத்து சிறப்பிக்கிறார்கள்

    இறைபணியில் ஆலயநிர்வாகசபையினர்
    தொடர்புகளுக்கு – தலைவர் k.சிவகுருநாதன் 52509980 செயலாளர் k. சக்திதாசன் 28691019 பொருளாளர் . பா. பவானந்தன் 21847814

    செவ்வாய், 13 டிசம்பர், 2016

    சுவெற்றாநகர் கனகதுர்க்கா ஆலயத்தில் விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது.

    By: Unknown On: PM 1:26
  • Share The Gag
  • சுவெற்ரா கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் இன்று 13.12.2016
    புகைப்படங்கள். தம்பி புவனேந்திரன்
    யேர்மனி சுவெற்ராநகர் கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 12.12.16 இன்று விஷ்ணு ஆலயதீபபூஜை சிறப்பாக நடைபெற்றது. சிறப்புற்ற பக்தர்கள் வருகையோடு நடந்தேறியுள்ளது

    இதில் பிரதான ஆலயக்குருக்கள் ‌ஐெயந்திநாதசர்மா அவர்களின் தலைமையில் இந்த பூஜைகளை சிறப்பித்து நிற்க

    அவர்மகன்மள்பிம்மசிறி சங்கர்ஷண், சர்மாவுடன் பிரம்மசிறி சிவதனுஷ் சர்மா அவர்களும் திறம்படநடாத்தியது பக்தர்களைப் பக்திப் பரவசப்படுத்தியது.சிறப்பு ஆலம் தொழுதல் அகமகிழ்வாக சிறப்புறறதைப்பார்போம்


    எஸ்.ரி.எஸ் இணைய நிருபருமானபுவனேந்திரன்.தம்பிநாதரும் அவர்கள் பதிவாக தந்துள்ளார் இதை உங்கள் பார்வைக்காய் நம்மவர் இணையம் தருகின்றது

    வியாழன், 8 டிசம்பர், 2016

    உன்னோடும் காதல் ...!கவிதை பொத்துவில் அஜ்மல்கான்

    By: Unknown On: AM 9:12
  • Share The Gag
  • நிலையான காதல்
    கொண்டு,
    உயிரான உன்னை
    அனைத்து,
    என்னுயிரில் உன்னை
    வரைந்து,
    கனவுகளை களவு
    செய்து,
    உயிரை நமக்கன
    மாற்றினாய்,
    தனிமைகளை இனிமை
    ஆக்கினாய்,
    உணர்வில்லாத உடல்
    உன்னோடும் காதல்
    கொண்டதால்.... 


    ஆக்கம் பொத்துவில் அஜ்மல்கான்

    ஒரு தலைக் காதல்...! கவிதை ஏரூர் எழுதிய விவசாயம்

    By: Unknown On: AM 9:05
  • Share The Gag
  • ஏதோவொன்று
    சொல்லத் தோணுது
    உன் மோகம் - என்னை
    கொல்லத் தூண்டுது

    பாவம் பார்த்து
    காதல் வருமா..
    பாவை நெஞ்சை
    காதல் சுடுமா..

    கனவு காண்பது
    கண்களில் அல்ல
    காதல் என்பது
    புதுக்கவிதையல்ல

    உயிரை விடவும் தோன்றும்
    காதல் உயர்வானது
    உறவு கொள்ள தூண்டும்
    காதல் மிருகமானது

    ஒரு கை ஓசை தருவதில்லை
    இரு உணர்வுகள்
    ஒன்று பட்டால் காதல் சாவதில்லை

    எழுதி உணர்த்த
    நான் கவிஞனல்ல
    கவித்தென்றல் நானோ
    காதலிக்கவில்லை

    செவ்வாய், 6 டிசம்பர், 2016

    சங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா05.12.16 நிழல் படங்களைப்பார்க்க...

    By: Unknown On: AM 9:43
  • Share The Gag
  • 05.12.2016 உண்ணாப்பிளவு சங்கீதா முன்பள்ளியில் ஒளிவிழா நிகழ்வும் பிரியாவிடை நிகழ்வும் சிறப்பாகஇடம்பெற்றது இந்த நிகழ்வு கலைஞர் கு.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றிருந்தது. முதல் நிகழ்வாக விருந்தினர் வரவேற்பு இடம்பெற்றது அதனை தொடர்ந்து அருட் தந்தை அமலதாஸ்
    ஆசியுரையினை வழங்கியிருந்தார் அதன்பின் வரவேற்பு உரையினை ஆசிரியர் செல்வி மேரி கீர்த்தனா வழங்கினார்
    தொடர்ந்து மாணவச் செல்வங்களின் கலை நிகழ்வு இடம்பெற்றது அதன் பின் சிறப்பு விருந்தினர் உரை
    கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழங்கினார் தலைமை ஆசிரியர்
    உரை தனராசா சத்திய லதா வழங்கினார் அதனை தொடர்ந்து நத்தார் பாப்பா வருகை தந்து மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் இனிப்பு பண்டம் வழங்கி நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது ..