சனி, 7 மே, 2016

Tagged Under:

தனுசின் என்னை பெற்ற அன்னையே !

By: Unknown On: AM 11:21
  • Share The Gag
  • மன அறையில் ஓர் கனவு 
    கருவறையில் ஓர் கருவு 
    ஆணா ? பெண்ணா? தெரியாது 
    எதுவானலும் அது உனக்கானது 
    என ஏற்றுகொள்ள துணிந்தாய் ! 
    பத்து மாதத்தில் கரு 
    முழு உருவானது 
    உன்னுடல் விட்டு பிரிவானது ! 
    முதல் பிரிவே அழுகையோடு ! 
    நீயும் அழுதாய் நானும் அழுதேன் ! 
    நீ மட்டும் இருமுறை அழுதாய் 
    ஒரு முறை ஆனந்த கண்ணீர்! 
    மருமுறை பிள்ளை அழுகிறதே யென 
    வருந்தி வடித்த கண்ணீர் ! 
    என் அழுகையின் காரணம் 
    மீண்டும் போக முடியாத 
    சொர்கத்தை பிரிந்தோமே யென! 
    சேர்த்து வைத்த பெயர்களில் ஒன்றை 
    எனக்காக செலவு செய்தாய் ! 
    மூலதனம் இல்லாமல் நீ செய்த 
    முதல் செலவு ; அது 
    இன்றுவரை தொடர்கிறது -என் 
    அடையாளத்தின் மூலதனமாய் !

    என்னை பெற்ற அன்னையே !
    இன்றைய தினத்தில் உன்னைப் போன்ற அனைத்து அன்னையர்களுக்கும் என் பணிவான "அன்னையர் தின நல் வாழ்த்து" தெரிவித்துக் கொள்கிறேன் ! ! ! 
    உன்னை மட்டுமே என் கடவுளாய் 
    என்றென்றும் வணங்குகிறேன் !!!!!!


    ஆக்கம் இற்றாலியில் இருந்து
    தனு

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக