மன அறையில் ஓர் கனவு
கருவறையில் ஓர் கருவு
ஆணா ? பெண்ணா? தெரியாது
எதுவானலும் அது உனக்கானது
என ஏற்றுகொள்ள துணிந்தாய் !
பத்து மாதத்தில் கரு
முழு உருவானது
உன்னுடல் விட்டு பிரிவானது !
முதல் பிரிவே அழுகையோடு !
நீயும் அழுதாய் நானும் அழுதேன் !
நீ மட்டும் இருமுறை அழுதாய்
ஒரு முறை ஆனந்த கண்ணீர்!
மருமுறை பிள்ளை அழுகிறதே யென
வருந்தி வடித்த கண்ணீர் !
என் அழுகையின் காரணம்
மீண்டும் போக முடியாத
சொர்கத்தை பிரிந்தோமே யென!
சேர்த்து வைத்த பெயர்களில் ஒன்றை
எனக்காக செலவு செய்தாய் !
மூலதனம் இல்லாமல் நீ செய்த
முதல் செலவு ; அது
இன்றுவரை தொடர்கிறது -என்
அடையாளத்தின் மூலதனமாய் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக