வியாழன், 28 ஏப்ரல், 2016

Tagged Under:

கவிக்குயில் சிவரமணியின் முகமூடி

By: Unknown On: AM 4:20
  • Share The Gag
  • அசைபோட்டு 
    இரைமீட்கும் 
    நினைவுகளில் 
    அரிதாரம்பூசா
    அவதாரங்கள் அதிகமோ..???

    கருப்பொருள் எதுவாக
    மறைபொருள் தானாக
    பொறாமை தீயாக
    கடிமனம் மானிடராக
    இடைவிடாதுயறுரும் 
    இழிநிலை எதனாலோ ..???

    சொல் நேர்த்தி 
    செயல்நேர்த்தி
    சொல்லாடும் களம் நேர்த்தி 
    அகத்தோட்டம் நேர்த்தி 
    அதுவின்றிபானால் 
    ஆகுமோ நேர்த்தி ...??

    வேடத்தில் வெண்மை
    வெள்ளைத்துரை நேர்மை 
    தோற்றத்ில் குழைவு 
    தோண்டினால் குழவி
    குத்துவதும் குடைவதும் 
    விதைத்தின் கணக்குப்படி..!!

    ஆடத்தெரியாதவன்
    அரங்கை ஆராயலாமோ
    அகமதும் புறமதும் 
    அழுக்கானவர் 
    அன்பினர் ஆவாரோ
    ஆயிரம் முகமூடி..ஆங்காங்கே 
    முகமூடி நிரந்தரமில்லை புதுமொழியிங்கே...!!

    கனவு கண்டது ஆக்கம்  கவிக்குயில் சிவரமணி

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக