செவ்வாய், 19 ஏப்ரல், 2016

Tagged Under:

கவித்தென்றல்‬ எழுதிய ஏட்டுக்கு எட்டாத கல்வி

By: Unknown On: AM 7:34
  • Share The Gag
  • உருகிய வெண்ணையாய் அவள் தேகம்
    உயிரினில் உருகுது அவள் மோகம்
    விலகிய சேலையும் இடைதனிலே
    விரகமெனும் நூலை எழுதியது விழியினிலே..

    பாமரனும் படிக்க நினைக்கும் நூலிது
    பகலவனும் பணிந்து போகும் கோளிது
    தாமரையும் நனைந்துவிடும் நாளிதழ்
    தலையணையும் எழுதிடும் ஓர் மடல்

    ஏட்டுக்கு எட்டாத கல்வியோ...
    நல்ல பாட்டுக்கும் சிக்காத பல்லவியோ..
    கூட்டுக்குள் தங்காத குருவியோ...
    வேட்கையை தீர்க்காமல் போறியா?

    ஆக்கம்
    கவித்தென்றல் 

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக