வியாழன், 21 ஏப்ரல், 2016

Tagged Under:

மட்டுநகர் கமல்தாஸ் எழுதிய பற்றுவை தாய் மண்ணின் மீது

By: Unknown On: AM 8:11
  • Share The Gag
  • மூத்தோர் தம் முதுகு கூனல் போல்
    முத்தம்ழை முடக்க சதி நிகழ்கிறது

    பெற்றோர் பாசமீறி தாய்மண்ணுக்காய்
    வித்தானோரின் நினைவுகள் சொல்கிறது

    நாற்று நட்ட நிலத்தினிலே
    பற்று கொண்ட மரவர்கள்
    காற்றும் புகா கல்லறுக்குள்
    யாகம் தொடர்கின்றது

    தோற்றவர் நாமென தூற்றினாலும்
    பெற்ற வெற்றிகள் பறை சாற்றுகின்றது
    கற்றவர் மறவாதிருக்க புகட்டி பாடம்
    தடயங்களாய் ஆங்காங்கே தெரிகின்றது

    போற்றிப்பாடிட பேனாமுனை பெருமிதம் கொள்கின்றது
    பெருமை புகழ்ந்த புதுவைப்புலவனின்
    பெரும்வீரவரிகள் கடமையை நினைவுகூறுகின்றது

    மாற்றிட எவனால் முடியும் 
    மாற்றங்களால் எம்மனமா பணியும்
    முற்று வைக்க நினைத்தவனுக்கு
    முற்றத்தைக்காணது அவர் விழி

    பற்றுவை தாய்மண்ணில்
    சற்று விலகிநிற்பார் பகை உன் வழியில்

    ஆக்கம் மட்டுநகர்
    கமல்தாஸ்

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக