வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Tagged Under:

நயினை விஜயனின் .முல்லைமோகனின் பிறந்தநாளுக்கான வாழ்த்து.!

By: Unknown On: AM 4:19
  • Share The Gag

  • மணிக்குரல் தந்த 

    மணிக்குரல் விந்தை 
    மனதை மயக்கும் 
    மாயக்குரல் 
    பொன்னிறத்தவன்
    பொன்மனத்தவன் 
    நாற்பது ஆண்டுகள் மேலாய் 
    மேடைகள் கண்டவன் !
    ஐரோப்பிய தமிழர் 
    தொலைக்காட்சியில் 
    முதலில் தோன்றியவன் !
    முத்தான மகளை பரதத்தில் 
    பதித்தவன் !
    கவினுறு மனையாளுடன் 
    விழாபல கண்டவன் !
    ஐிரிவி தொகுப்பில் 
    அனைவரையும் 
    இணைப்பவன் 
    இயமனை கண்டு 
    தன் குரல் கொண்டு
    மீண்டவன் !
    எங்கள் விழாக்கள் பலதையும்
    அழகுறத் தொகுத்து 
    அழியாப் புகழ் 
    கொண்டவன் !
    தமிழே உயிராய் மூச்சாய் 
    கொண்டவன் ! 
    மாருதப் பூங்கா எனும் 
    மனங்கவர் நிகழ்வை 
    முதலாய் கலைக்குத் 
    தந்தவர் ! 
    அன்புறு குழந்தைகள் 
    அரவணைப்பில் வாழ்பவர் !
    ஆக மொத்தம் 
    எல்லோர்க்கும் இனியவர் 
    பல்லாண்டுகள் வாழ 
    இதயத்தால் வாழ்த்துகிறேன் !

    - நயினை விஜயன் -

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக