மணிக்குரல் விந்தை
மனதை மயக்கும்
மாயக்குரல்
பொன்னிறத்தவன்
பொன்மனத்தவன்
நாற்பது ஆண்டுகள் மேலாய்
மேடைகள் கண்டவன் !
ஐரோப்பிய தமிழர்
தொலைக்காட்சியில்
முதலில் தோன்றியவன் !
முத்தான மகளை பரதத்தில்
பதித்தவன் !
கவினுறு மனையாளுடன்
விழாபல கண்டவன் !
ஐிரிவி தொகுப்பில்
அனைவரையும்
இணைப்பவன்
இயமனை கண்டு
தன் குரல் கொண்டு
மீண்டவன் !
எங்கள் விழாக்கள் பலதையும்
அழகுறத் தொகுத்து
அழியாப் புகழ்
கொண்டவன் !
தமிழே உயிராய் மூச்சாய்
கொண்டவன் !
மாருதப் பூங்கா எனும்
மனங்கவர் நிகழ்வை
முதலாய் கலைக்குத்
தந்தவர் !
அன்புறு குழந்தைகள்
அரவணைப்பில் வாழ்பவர் !
ஆக மொத்தம்
எல்லோர்க்கும் இனியவர்
பல்லாண்டுகள் வாழ
- நயினை விஜயன் -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக