வியாழன், 21 ஏப்ரல், 2016

Tagged Under:

மார்ஷல் வன்னி எழுதிய அம்மாவும் நானும் !

By: Unknown On: PM 2:21
  • Share The Gag
  • பெளர்ணமி விரதமும் 
    அம்மாவும் நானும் !
    ஆண்டு தோறும் நீ வருவாய் என்று
    புன்னகை பூத்திருந்து காத்திருப்பேன் 
    பெளர்ணமி நிலாவே !

    தாகம் நாவை வாட்ட வயிற்றை பசி வாட்ட ஊர் உறங்கும் நேரத்தில் வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்-உன் ஆனந்த பவனிக்காய் !
    பதினைந்து ஆண்டுகளாக உன் வருகை கண்டு என் புன்னகையும் சுருங்கியது...என் மனமும் தடுமாற்றத்தில் திக்குமுக்காடியது !
    நீ வரும் பாதையை இழுத்து சாத்திக்கொண்டேன் நீயும் ஒவ்வொரு ஆண்டும் என்னை தேடி வருகிறாய் உன் வருகை கண்ட என் மனசு உன்னை உதறி தள்ளியது !
    அம்மா....
    மீண்டும் என்னோடு பேசினால் என்ன..?
    ஒரு தடவை என்னை வந்து பார்த்தால் என்ன என்று சின்னப்பிள்ளை தனமாக என்னுள் தோன்றும் ஆனால் நான் வீட்டில் கடசி என்பதலோ என்னவோ என்னால் தூக்கி காவி செல்ல முடியாத பாரத்தோடு தினமும் கேவி கேவி அழுகின்றேன் !

                                                           ஆக்கம் 
    மார்ஷல் வன்னி


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக