விண்ணும் தன்னை மறந்து மண்ணை காணுதே
வெட்டவெளியதை வேடிக்கை பார்க்குதே
கண்ணைக் கவரும் மாயங்கள் வானில் நடக்குதே
நள்ளிரவானால் உலக அழகில் மனம் பறிபோகுதே..!!
வர்ண ஜாலம் போடும் வானமே
வாழ்வில் நான் கண்ட புதினமே
எண்ணி எண்ணி உனை தினமே
ஏக்கம் கொள்ளுதே என் மனமே..!!
மண்ணில் நான் பிறந்தேன்
உன் விந்தை கண்டு வியந்தேன்
இயற்கை ஒரு வரமா இதம் தினம் தருமா
இரவில் இத்தனை அதிசயமா இன்பம் கோடி அதில் நலமா.!!
அமைதி எப்போதும் உன்னில் தஞ்சம்
அழகுக்கு இல்லை இரவில் பஞ்சம்
இரவை ரசித்தால் நீயும் கொஞ்சம்
எல்லையில்லா மகிழ்ச்சி மனதையும் மிஞ்சும்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக