வியாழன், 2 ஜூன், 2016

Tagged Under:

கவித்தென்றல்‬ எழுதிய நீதான் எந்தன் பொன்வானே..!

By: Unknown On: AM 4:53
  • Share The Gag
  • ஆரஞ்சி நிறத்தழகு பெண்ணே - என்
    ஆவியை அறுத்தெடுக்கும் கண்ணே
    பூவிழி பார்வை எரிக்குதடி என்னை
    பூமியிலே நானும் தவிக்கிறனே பெண்ணே

    ஒளிகள் கொண்டு உன் உருவம் செய்தானோ -பல
    விழிகள் கொய்யும் உந்தன் மெய்தானோ
    மொழிகள் கூட உதிரும் தேன் தானோ
    கிளியே நீதான் எந்தன் பொன்வானோ

    மரபுக் கவிதை சொல்லுது உன் ஜாடை
    அரபுக் கடலிலும் வீசும் நீ பெண் வாடை
    இரவுப் பொழுதில் உறைந்திடும் நீரோடை - என்
    உறவைக் கொண்டாடிட வா நீராட....

    பதுமை கொண்ட உன் வெண்பணி கழுத்து
    உவமை சொல்லிடும் செந்தமிழ் எழுத்து
    உரிமை கொண்டிட உன்னை நீ நிறுத்து -என்
    இளமை உண்டிட நீ தான் என் விருந்து


                               ஆக்கம் வித்தென்றல் 

                                                    

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக