ஆரஞ்சி நிறத்தழகு பெண்ணே - என்
ஆவியை அறுத்தெடுக்கும் கண்ணே
பூவிழி பார்வை எரிக்குதடி என்னை
பூமியிலே நானும் தவிக்கிறனே பெண்ணே
ஒளிகள் கொண்டு உன் உருவம் செய்தானோ -பல
விழிகள் கொய்யும் உந்தன் மெய்தானோ
மொழிகள் கூட உதிரும் தேன் தானோ
கிளியே நீதான் எந்தன் பொன்வானோ
மரபுக் கவிதை சொல்லுது உன் ஜாடை
அரபுக் கடலிலும் வீசும் நீ பெண் வாடை
இரவுப் பொழுதில் உறைந்திடும் நீரோடை - என்
உறவைக் கொண்டாடிட வா நீராட....
பதுமை கொண்ட உன் வெண்பணி கழுத்து
உவமை சொல்லிடும் செந்தமிழ் எழுத்து
உரிமை கொண்டிட உன்னை நீ நிறுத்து -என்
இளமை உண்டிட நீ தான் என் விருந்து
0 கருத்துகள்:
கருத்துரையிடுக