காத்திருக்கிறேன்
கண் வழி புகுந்தவனுக்காக அல்ல
கருணை உள்ளத்துடன்
காதலிப்பவனுக்காக
கசங்கிய இதயத்தில்
கசியும்
கண்ணீரை துடைத்து
காவியமாக்குபவனுக்காக
காத்திருப்பதும் ஒருவகை
கடும் தவம் தான்
கடந்து வந்த
காலங்களை
கதைகளாக்கி
கவிதைகளில் புதுமை காண
கனாக்கள் நிஜமாக
களிப்புடன் காத்திருக்கிறேன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக