வியாழன், 8 டிசம்பர், 2016

Tagged Under:

ஒரு தலைக் காதல்...! கவிதை ஏரூர் எழுதிய விவசாயம்

By: Unknown On: AM 9:05
  • Share The Gag
  • ஏதோவொன்று
    சொல்லத் தோணுது
    உன் மோகம் - என்னை
    கொல்லத் தூண்டுது

    பாவம் பார்த்து
    காதல் வருமா..
    பாவை நெஞ்சை
    காதல் சுடுமா..

    கனவு காண்பது
    கண்களில் அல்ல
    காதல் என்பது
    புதுக்கவிதையல்ல

    உயிரை விடவும் தோன்றும்
    காதல் உயர்வானது
    உறவு கொள்ள தூண்டும்
    காதல் மிருகமானது

    ஒரு கை ஓசை தருவதில்லை
    இரு உணர்வுகள்
    ஒன்று பட்டால் காதல் சாவதில்லை

    எழுதி உணர்த்த
    நான் கவிஞனல்ல
    கவித்தென்றல் நானோ
    காதலிக்கவில்லை

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக